உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு புது ஏற்பாடு


நெல்லிக்குப்பம் : 

             அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க புதிய முறையாக கேபிள் 'டிவி'யில் விளம்பரம் செய் துள்ளனர்.

               தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகளவு சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். தனியார் பள்ளிகள் நாளிதழ்கள், கேபிள் 'டிவி' போஸ்டர் விளம்பரங்கள் என பல வழிகளில் பெற்றோர்களை ஈர்க்க முயன்று வெற்றி பெறுகின்றனர். அரசு பள்ளிகளில் செலவில்லாமல் தானாகவே மாணவர்கள் சேர்ந்தால் தான் உண்டு. ஆனால் அரசு பள்ளிகளுக்கு முன் மாதிரியாக திருக்கண்டேஸ்வரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற திருஞானசம்பந்தம் தனது செலவில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கேபிள் 'டிவி'யில் விளம் பரம் கொடுத்துள்ளார். இதே போல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆர்வமுடன் செயல்பட்டால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயரும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior