உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் இன்று முதல் அடையாள அட்டை

 கடலூர்:

            கலைஞரின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல், முகாம்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

          கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைச் சேர்க்க புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணி ஏற்கெனவே கிராமம்தோறும் நடைபெற்று உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. கடலூர் நகராட்சிப் பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு இன்று முதல் 20-ம் தேதி வரை வார்டுகள் வாரியாக, அதற்கென குறிப்பிட்ட இடங்களில் வழங்கப்படும். அடையாள அட்டை கிடைக்காதவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு அடையாள அட்டைகளைப் பெறலாம்.இதற்காக அவர்கள் ரேஷன் கார்டுடன் வர வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior