
கடலூர் :
கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருடன் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை 9 மணிக்கு வருகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாக திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி., மகேஷ்வரன், கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், நரசிம்ம பட்டாச்சாரியாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெங்கடகிருஷ்ண பட்டாச்சாரியார், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர வடிவேலு, சுரேஷ் கண்ணன் (தனிப்பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவேல், ஆனந்தபாபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக