உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : 

        சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர்கள் நியமிக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இதுகுறித்து நகர அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மகாராஜன் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: 

               சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 750க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக் காக வருகின்றனர். ஆனால், தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவருக்கு மருத்துவ முகாம், அலுவலக பணி, அவரது சொந்த பணி, விடுமுறை நாள் உட்பட வாரத்தில் ஒரு நாள் முழு நேரமும் தங்கி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் டாக்டர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே சேத்தியாத் தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர் பணியிடங்களை உருவாக்கி டாக்டர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior