உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்டோ டிரைவர்களுக்கு ஆலோசனை


கடலூர் : 

           போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனைக் கூட டம் நடந்தது.

             கடலூரில் ஆட்டோக்கள் நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக லாரன்ஸ் ரோட்டில் வரிசையாக ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு வட்டார போக் குவரத்து அலுவலர் ஜெயக் குமார் தலைமையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ் பெக்டர் பிரகாஷ், ஏட்டு ஞானசேகரன், கடலூர் நகரில் உள்ள ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

               கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் ஆட்டோக் களை நிறுத்தக் கூடாது. டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆட்டோக்களுக்கான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறின்றி நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் பேசுகையில், 

                 'பஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் பஸ்கள் அடுத்த பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் ஆங்காங்கே நின்று செல்வதாகவும், பஸ் நிலையத்திற்குள் வரும் போது வேகமாக வருவதால் விபத்து ஏற்படுத்துவதாகவும் கூறினர். இதுகுறித்து பஸ் டிரைவர்களுக்கு தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய ஆலோசனை வழங்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் உறுதியளித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior