உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு! நடைமுறையை எளிதாக்க கோரிக்கை


நெல்லிக்குப்பம் : 

             அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் இயற்கை மரணம் அடைந் தால் கூட நகராட்சியில் டாக்டர் சான்று கொடுத்து இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவால் சாமானிய மக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

              ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளாட்சிகள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்புகளை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என அரசும் வலியுறுத்தி வருகிறது. இதற்காக பெரும் சிரத்தை எடுத்து சான்றிதழ் பெறுவதும் உண்டு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு பிறப்பு சான்றிதழுக்காக அலையாய் அலைவதை காணலாம். அதே போன்று ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகள் இறப்பு சான்றிதழ் பெற்றால் தான் இறந்தவரின் பெயரிலுள்ள பட்டா, வங்கி கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு, அரசு உதவிகள் போன்றவற்றை பெற முடியும். எனவே இறப்பு சான்றிதழ் பெறுவது முக்கியமானதாகும்.

                இதுவரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இயற்கை மரணமடைந் தால் டாக்டர் சான்றிதழ் ஏதுமின்றி அப்படியே பதிவு செய்வார்கள். அறுபது வயதுக்குள் இறந்தால் மட்டுமே டாக்டர் சான்று பெற்று பதிவு செய்வது வழக்கம். விபத்து மற்றும் தற் கொலை செய்து கொண்டு இறப்பவர்களுக்கு போலீஸ் சான்று வாங்கித் தரவேண்டும். தற்போது 80 வயது வரை உள்ளவர்கள் இயற்கையாக இறந்தால் கூட எப்படி இறந்தார் என டாக்டர் சான்று வாங்கி கொடுத்தால் மட்டுமே நகராட்சியில் இறப்பு பதிவு செய்ய முடியும் என கூறுகின்றனர். வயதானவர்கள் உண்மையிலேயே உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தால் கூட டாக்டர் சான்று தேவை. டாக்டர்களிடம் சான்று கேட்டால் என்னிடம் சிகிச்சை பெறவில்லை. அவர் எப்படி இறந்தார் என தெரியாது. அதனால் சான்று கொடுக்க முடியாது என மறுத்து விடுகின்றனர். டாக்டர் சான்று கிடைக் காததால் இறப்பை பதிவு செய்ய முடியாமல் சாமானிய மக்கள் தவிக்கின்றனர். ஒருவர் இறந்தால் இறப்பு பதிவு செய்ய மனு கொடுப் பார்கள். அதிகாரிகள் இறந் தவர்கள் வசித்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை செய்தால் இறப்பின் காரணத்தை அறிய முடியும். இதற்கு டாக்டர் சான்று தேவையில்லை. டாக்டர் சான்று கட்டாயம் என்றால் அதிகாரிகள், இறப்பின் காரணத்தை விசாரித்து நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மூலம் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

இதுபற்றி அதிகாரிகள் கூறியது 

               'நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் இறந்தால் கட்டாயமாக கடலூர் நகராட்சியில் இறப்பு பதிவு செய்வார்கள். இறந்தவரின் உறவினர்கள் அங்கு இறப்பு சான்றிதழ் வாங்கலாம். ஆனால் நெல்லிக்குப்பத்தில் இறந்தது போல் பதிய வருகிறார்கள். இரண்டு மனைவி உள்ளவர் இறந்தால் இருவரும் வெவ்வேறு ஊர்களில் இறப்பு பதிவு செய்கிறார்கள். இதனால் எங்கள் வேலைக்கு தான் ஆபத்து. இறப்புக்கான காரணம் குறித்து டாக்டர் சான்று கொடுத்தால் இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும்' என கூறுகின்றனர். இறப்பு பதிவு என்பது கட்டாயம் என்பதால் அதற் கான நடைமுறையை எளிதாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior