உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

மேல்புவனகிரி ஒன்றியத்தில் ரூ.54 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்


புவனகிரி : 

             பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி திட்டத்தில் மேல்புவனகிரி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

                  மேல்புவனகிரி ஒன்றிய குழு அவசர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி, ஜமுனா முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், 2010-11ம் ஆண்டின் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்கும் அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மேல்புவனகிரி ஒன்றியத்திற்கு 54 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய் துள்ளது. இதற்கான திட்டபணிகள் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு புள்ளி விபரங்கள் தெரிவிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior