உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

விருத்தாசலம் அருகே தீ விபத்து கன்று குட்டி, ஆடு, கோழிகள் கருகின


விருத்தாசலம் : 

              நள்ளிரவில் கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் கொட்டகையில் கட்டியிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகின.

              விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் குணசேகரன். இவருக்கு கார்குடல் முனியப்பர் கோவில் தெருவில் இரண்டு கூரை வீடுகள் உள்ளது. ஒரு வீட்டில் குணசேகரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்றொரு கூரை வீட்டில் அவரது அக்கா கொளஞ்சி வசித்து வருகிறார். கொளஞ்சி தங்கியிருக்கும் வீட்டின் பின் பகுதியில் கொட்டகை உள் ளது. இந்த கொட்டகையில் குணசேகரன் இரவு நேரங்களில் தனக்கு சொந் தமான ஆடு, மாடு, கோழிகளை அடைத்து வைத்திருப்பது வழக்கம்.

                     நேற்று முன்தினம் இரவு கொளஞ்சி கொசுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு திடீரென கொளஞ்சி தங்கியிருந்த வீடு தீப்பிடித்தது. இதில் அருகில் இருந்த கொட்டகையும் தீப்பிடித்து எரிந்ததில் அங்கு இருந்த 14 ஆடுகள், 25 கோழிகள், 1 கன்று குட்டி தீயில் கருகி இறந்தன. மேலும் வீட்டில் இருந்த துணிகள், உணவு பொருள் கள் சாம்பலாயின. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior