உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

வடலூர் உழவர் சந்தையில் காய்கறி வாங்கி பயனடைய வேண்டுகோள்


கடலூர் : 

              வடலூர் உழவர் சந்தையில் மலிவுவிலை காய்கறியை வாங்கி பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   வடலூரில் 2009ம் ஆண்டு முதல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. காய்கறி வரத்து மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்கவும் உழவர் சந்தை வார விழா கடந்த 15ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வார விழாவில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் ஒருங் கிணைந்து வடலூரை சுற்றி அதிக காய்கறி பயிரிடும் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து காய்கறி கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

                 நுகர்வோரை ஈர்க்கும் வகையில் நகர்ப்புறங்களில் உழவர் சந்தையில் விலை குறைவான, காய்கறிகள், கீரைகள், பழங்கள் கிடைக்கும் என் பதையும், பொதுமக்கள் உழவர் சந் தைக்கு வருவதன் மூலம் காய்கறிகளை மலிவான விலைக்கு வாங்கி பணம் சேமிக்கலாம் என்பது குறித்து ஒலி பெருக்கி, வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் உழவர் சந்தையை பயன்படுத் திக் கொள்ளுமாறு துணை இயக்குனர் கேட் டுக் கொண்டுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior