உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு


நெல்லிக்குப்பம் : 

          நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆய்வு செய்தார்.

         நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி. அஷ்வின் கோட்னீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வழக்கு கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதனையடுத்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட் டுள்ள புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் வளா கத்தில் மரக் கன்றுகள் நட்டார். இன்ஸ் பெக்டர் பாண்டியன் சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உடனிருந்தனர்.

  பின்னர்  எஸ்.பி. அஷ்வின் கோட்னீஸ் கூறுகையில் 

                 'நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தியதாக மாற்ற உள்துறை செயலாளர் அனுமதி கிடைத்துள்ளது. நிதித்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் போலீஸ் நிலையம் தரம் உயர்த்தப்படும். கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவர். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு தனித் தனியாக இன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள். இதன்மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். விரைவில் இம்மாற்றங்கள் செய்யப்படும். புதிய கட்டடம் விரைவில் திறக்கப்படும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior