உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

திட்டக்குடி - சிறுபாக்கம் 30 கி.மீ., சாலை 'டர்...'


திட்டக்குடி:

             திட்டக்குடி - சிறுபாக்கம் வரையிலான 30 கிலோ மீட்டர் தார் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

             திட்டக்குடியை தாலுக்காவின் தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிறுபாக்கம் குறுவட்டம் 32 கிலோ மீட்டர் தொலைவில், மாவட்டத்தின் கடைசியில் அமைந்துள் ளது. இங்குள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூர் வழியாக சிறுபாக்கம் வரை செல்ல கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் 30 கி.மீ., தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.

                இவ்வழியாக முப்பதுக்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி விளை பொருட்களான கரும்பு, நெல், மணிலா, மக்காச் சோளம், எள், பருத்தி ஆகியவற்றை வியாபாரத்திற்காக திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் சந்தைகளுக்கு நேரடியாக எடுத்து செல்கின்றனர். தவிர பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என பல தரப்பினரும் இவ்வழியை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வலுவிழந்து போக்குவரத்து துண் டிக்கப்படும் நிலைக்கு மாறுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக 'பேட்ஜ் ஒர்க்' செய் யாத காரணத்தால் சைக் கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைகின்றனர்.

                இந்த சாலை கடந்த 2008ல் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து 94.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டக்குடி - சிறுபாக்கம் வரை பழுதடைந்த தார் சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சீரமைக்கப்பட் டது. பிரதான சாலைக்கே பணிகள் சரியாக நடைபெறாத நிலையில் சிறுபாக்கம் வரையிலான குக்கிராமத்திற்கு செல்லும் சாலைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

              திட்டக்குடி- சிறுபாக்கம் தார் சாலையை முழுவதுமாக சீரமைத்து இருவழிப்பாதையாக மாற்றினால் கள்ளக்குறிச்சி, சேலம், ஆத்தூர், பெங்களூரு, ஓசூர் உள் ளிட்ட பெரு நகரங்களுக்கு ராமநத்தம் வழியாக சென்று கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இப்பகுதி வழியாக திருப்பி விடலாம். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும் குறைந்து உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவதோடு வேப்பூர், ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தினால் நீண்ட நேரம் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பினை தவிர்க்க இந்த சாலையை மாற்று வழியாகவும் பயன்படுத்தலாம்.

               குறிப்பாக திட்டக்குடியிலிருந்து ராமநத்தம், ஆவட்டி, வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் நேரத்தை காட்டிலும் திட்டக்குடி, ஆவட்டி, மங்களூர், சிறுபாக்கம், சின்னசேலம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் போது குக்கிராம மக்கள் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை மாறும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior