உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

தொடும் தூரத்தில் மின் கம்பி: பொதுமக்கள் அச்சம்


சிதம்பரம் : 

            வயல்வெளியில் தொட்டு விடும் தூரத்தில் தாழ்வாக மின்கம்பி செல் வதால் கிராம மக்கள் அச் சத்துடன் செல்கின்றனர்.

                  சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமம் பெரிய தெருவில் வயல்வெளி வழியாக மின் கம்பி மிகவும் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்கிறது. மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி கழன்று விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை மின்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மின்கம்பி தாழ்வாக இருக் கும் இடத்தில் தலைவணங்கி குனிந்தபடி செல்ல வேண்டும். நிமிர்ந்து சென்றால் அவ்வளவுதான். அத்துடன் அந்த வயலில் வேலை செய்பவர்களும் அச்சத்துடன் நடவு செய்து, அறுவடையும் செய்துள்ளனர். காற்று பலமாக வீசினால் மின்கம்பிகள் ஒன் றோடு ஒன்று உரசி தீப்பொறி கிளம்புகிறது. மேலும் அந்த மின் கம்பிக்கு அருகிலேயே செல்லும் உயர்அழுத்த மின் கம்பியும் உராய்வதால் எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என கிராம மக்கள் அஞ்சுகின்றனர். ஒரு ஆண்டாக இந்த நிலை இருந்தும் மின் துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். ஊராட்சி தலைவர் பொன்னுசாமி மற்றும் கிராம மக்கள் மின் துறை அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இருந்தும் ஆபத்தான நிலை நீடித்து வருகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior