உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

என்.எல்.சி.,யில் ஆர்ப்பாட்டம்


நெய்வேலி : 

               என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வலியுறுத்தி நெய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 2 மாதங்களாக நிர்வாகத்துடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுமையான தீர்வு காணாததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு என்.எல்.சி., டவுன்ஷிப் ப்ளாக்-1 நேரு சிலை வளாகத்தில் தொ.மு.ச., மற்றும் பா.தொ.ச., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள் வீர ராமச்சந்திரன், கோபாலன், ரகுராமன், காத்தவராயன் மற்றும் பா.தொ.ச., தலைமை நிர்வாகிகளும் பெருமாள், திலகர், ஏஞ்சலின் மோனிகா, சுப்ரமணியன் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior