உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு பயிற்சி


நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை சார்பில் சிறுவத்தூரில் கரும்பு விவசாயிகளுக்கு மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

            கோட்ட அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கினார். கரும்பு ஆய்வாளர் முருகன் வரவேற்றார். மண்வளம், இயந்திர மயமாக்கல், சொட்டுநீர் பாசனம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, கட்டைக் கரும்பு பராமரிப்பு போன்ற தொழில் நுட்பங் களை படக் காட்சிகளுடன் விளக்கினர். நேரடியாக வயல்களில் சொட்டுநீர், தெளிப்புநீர் பயன்பாடு, சோலையை பொடியாக்குதல், கங்கு அறுக்கும் இயந்திரம் செயல் விளக்கங்களை காண்பித்தனர். ஆலையில் எடைத்தளம், சர்க்கரை, மின்சாரம் உற்பத்தி முறைகளை பார்வையிட்டனர். பயிற்சி முடித்த விவசாயிகளுக்கு சான்றிதழ்களை முதுநிலை மேலாளர் சங்கரலிங்கம் வழங்கினார். விவசாய பயிற்சி அலுவலர் குருசாமி, விரிவாக்க அலுவலர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior