உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

வணிகர் தினம்: கடைகள் அடைப்பு

 கடலூர்:

             வணிகர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை கடலூரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தினமாகக் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி கடலூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. நகைக் கடைகளில் 50 சதவீதம் திறந்து இருந்தன. ஹோட்டல்கள் வழக்கம்போல் திறந்து இருந்தன. காய்கறிக் கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள் திறந்து இருந்தன. வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடந்த வணிகர்கள் மாநாட்டுக்கு, கடலூர் மாவட்டத்தில் இருந்து 1000 வியாபாரிகள் சென்றதாக, மாவட்ட தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் டி.சண்முகம் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior