உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

குடிநீர் உறிஞ்சல்: ஒன்றிய கவுன்சிலர் மனு


கடலூர் : 

               கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சும் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கடலூர் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி தமிழ்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு: 

                 கோடை காலம் துவங்கிய நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தத்தால் கூத்தப்பாக்கம் பகுதியில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கூத்தப்பாக்கம் பகுதியில் உள்ள பல வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே எல்லோருக்கும் குடிநீர் கிடைக்க மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுபவர்களின் இணைப்பை துண்டித்து, மின் மோட்டாரை பறிமுதல் செய்ய வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior