உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்


திட்டக்குடி : 

                திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

               டாக்டர்கள் விருத்தாசலம் சங்கரலிங்கம், திட்டக்குடி ராஜேந்திரன், (கண்) சுப்பிரமணியம், (மனநலம்) சத்தியமூர்த்தி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினர். முகாமில் ஆவினங்குடி மையத்தின் கீழ் செயல்படும் ஆவினங்குடி, போத்திரமங்கலம், கோடங்குடி உட்பட 14 ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அணித்தலைவர் வேல் விழி, சுபாஷ்சந்திரபோஸ், திருமாவளவன், சிந்தாமணி, சரிதா, சிறப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior