உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

பண்ருட்டியில் குடிநீர் கேட்டு மறியல் செய்ய முயற்சி


பண்ருட்டி : 

                  பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

                    பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு காலனி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 7 நாட்களுக்கு முன் மோட்டார் இணைப்பு உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானது. வேறு டிரான்ஸ்பார்மர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. அதிக லோடு காரணமாக டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பியூஸ் போனது. இதனால் கடந்த நான்கு நாட்களாக காலனி பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை 9 மணிக்கு பெரிய எலந்தம்பட்டு மெயின்ரோடு கடலூர் - சித்தூர் சாலையில் மறியல் செய்ய 100க்கும் மேற் பட்டோர் திரண்டனர்.

                     இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில் தார் முத்துராமன், பி.டி.ஓ., சிவன், காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் சுப்பையா, மின்வாரிய உதவி பொறியாளர் செந் தில்குமார் ஆகியோர் பேச் சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டு நாட்களில் டிரான்ஸ்பார்மர் வைக்கப் படும். அதுவரை மாற்று இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior