உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

எஸ்.ஐ., நியமன தேர்வு கண்காணிப்பாளர்களாக வேறு மாவட்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும்


கடலூர் : 

                தமிழக காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் தவறு ஏற்படுவதை தவிர்க்க வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளை அறை கண் காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.

             தமிழகத்தில் காலியாக உள்ள 1,029 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்காக வரும் ஜூலை மாதம் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து இதுவரை ஒன்னரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத் தேர்வில் பணியில் இருக்கும் போலீசாருக்கு 20 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்பதால் மாவட்டம் தோறும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நடத் தப்படும் இத்தேர்விற்கு அந்தந்த மாவட்ட இன்ஸ்பெக்டர் அளவிலான போலீஸ் அதிகாரிகள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

              இவர்கள் ஒதுக்கப்பட்ட 20 சதவீத போலீசாருக்கும் பெரும்பாலும் தெரிந்த முகங்களாகவே இருக்கின்றனர். இதனால் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் நடந்த தேர்வுகளில் அறை கண்காணிப்பாளர்கள் சிலர் பணியிலிருக்கும் போலீசாருக்கு உதவி செய்துள்ளனர். இவர்கள் சர்வீசில் சப் இன்ஸ் பெக்டர்களாக வர வாய்ப்பு உள்ளது.

              போலீஸ் அல்லாதோர் பலர் போலீசில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன், இரவு பகல் பாராதும், பயிற்சி வகுப்புகளுக்கு சென்றும் தங்களை தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் தெரிந்த அதிகாரிகள் உதவியுடன் பணியில் இருக்கும் போலீசார் தேர்வில் வெற்றி பெற்றால் துறைக்கு ஆரோக்கியமாக இருக்காது. எனவே அறை கண்காணிப்பாளர்களை வேறு மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அல்லது ஆசிரியர்கள், வேறு துறை அதிகாரிகளை நியமித்தால் நேர்மையான முறையில் தேர்வு நடக்கும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior