உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1.5 லட்சம் சேதம்

திட்டக்குடி : 

                பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அருள் ஜோதி. இவரது கூரை வீட்டில் நேற்று முன் தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த சுப்ரமணியன் வீடும் தீப்பிடித்தது.தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உணவு தானியங்கள், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior