உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

சிறுபாக்கம், மங்களூர் டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை

சிறுபாக்கம்: 

                மங்களூர், சிறுபாக்கம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூரில் 7,000 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மருத்துவமனை, கூட்டுறவு நிலவள வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கனரா வங்கி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலகம் உள் ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினசரி 66 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் தங்களது அன்றாட அலுவலக பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

               இந்நிலையில் மங்களூர் பஸ் நிறுத்தம் அருகிலேயே கடைவீதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. வெளியூர் பயணிகள், உள்ளூர் கிராமவாசிகள் டாஸ்மாக் கடையை கடந்து செல்லும் போது குடிப்பிரியர்களின் ஆபாச பேச்சு, கேலி, கிண்டலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதேப்போல் சிறுபாக்கம் ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் வடபுறம் டாஸ்மாக் கடை அருகிலும் இந்தநிலை நீடிக்கிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரு இடங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior