உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ., முடிவு


திட்டக்குடி : 

               திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட் டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூ., கட்சி கிளைக் கூட்டம் நடந்தது. முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் பிச்சமுத்து, மருதமுத்து, நாராயணசாமி முன்னிலை வகித்தனர். வட்ட துணை செயலாளர்கள் முருகையன், சின்னதுரை, விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினர். கூட்டத்தில் ஆதமங்கலம் - சாத்தமங்கலம் பாலக்கரை வரையிலான பழுதடைந்த சாலையை விரைவில் டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும்.

                   ஆதமங்கலம்- தொளார், ஆவினங்குடி வரையிலான 20 ஆண்டுகளுக்கு மேலான பழுதடைந்த சாலை, திட்டக்குடி - நாவலூர் வழியாக செல்லும் தடம் எண்- 4 அரசு பஸ்சினை கூடுதலாக இருமுறை இயக்க வேண்டும். ஆதமங்கலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள வீட்டு மனைப் பட்டாவுக்கான தெருவை அளந்து மெட்டல் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5ல் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior