உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு 180 மாணவர்கள் அழைப்பு

                தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான 2010-11-ம் ஆண்டு பி.இ. கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.

           சிறப்பு ஒதுக்கீட்டில் விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 180 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 இடங்களும், மற்ற பொறியியல் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

                 விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்காக கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 400 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருந்து 180 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். விளையாட்டுப் பிரிவின் கீழ், ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் மட்டுமே சேர முடியும் என்றார். விளையாட்டுப் பிரிவின் கீழ், 2010-11-ம் ஆண்டு மொத்தம் 4,139 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர், அதில் 3,817 பேர் தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior