உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

இறகுப் பந்து போட்டி: 80 அணிகள் பங்கேற்பு

கடலூர் : 

              கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப் பந்து போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. கடலூர் இறகுப் பந்து நண்பர்கள் கழகம் சார்பில் ஆண்கள் இரட்டையர் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் இரண்டு நாள் போட்டி துவக்க விழா நேற்று காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.

                   நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். பாலசேகரன், முத்துக்குமரன், தாயுமானவன் வாழ்த்துரை வழங்கினர். இரட்டையர் பிரிவில் 50 அணிகளும், 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 30 அணிகளும் பங் கேற்றன.போட்டிகளை முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சக்கரை துவக்கி வைத்தார். நிகழ்ச் சியில் ஆசைத்தம்பி, வரதன், சுதாகர், ஓம்பிரகாஷ், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போட்டிகள் இன்றும் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று இரவு 7 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior