உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

கடமைக்கென நடக்கும் சாலை பணிவண்டிப்பாளையத்தில் மக்கள் அவதி

கடலூர்: 

                கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் "பேட்ஜ் ஒர்க்' செய்வதற்காக கடமைக்கென ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைக்கு பைப் லைன் புதைக்கும் பணிகள் முடிந்து பள்ளத்தில் "கான்கிரீட்' போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இச்சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங் கள் செல்ல தகுதியற்றதாக உள்ளது.

                 இச்சாலை வழியாக வண்டிப்பாளையம், வடுகப்பாளையம், புருகீஸ்பேட்டை, கேப்பர் மலை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் பஸ், ஆட்டோக்கள், இருசக்கர வாகனாங்களில் கடலூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சாலையில் உள்ள "மெகா சைஸ்' பள்ளங்களை சரி செய் வதற்காக "பேட்ஜ் ஒர்க்' பணி தற்போது நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் கடமைக்கென வெறும் கருங்கல் ஜல்லிகள் மட்டுமே கொட்டப்பட்டு பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலையில் வாகனங்கள் செல்லும் போது பள்ளத்தில் கொட்டப்பட்ட ஜல்லிகள் சிதறி சாலை முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதுடன் பழுதடைகின்றன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி வண்டிப்பாளையம் சாலையை விரைவில் சரி செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior