உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

மானிய விலையில் வேளாண் கருவிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திட்டக்குடி,: 

               பின்தங்கிய மங்களூர், நல்லூர் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள், உயிர் உரங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட இந்திய தேசிய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, தமிழக முதல் வர் கருணாநிதி, வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

                நல்லூர் மற்றும் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு ஏராளமான சிறு, குறு விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி ஜீவனம் செய்து வருகின்றனர். அண்மைக் காலமாக காலம் தவறிய பருவமழை, போதிய மழை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயப் பணி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்யவோ, விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமலும் கடுமையாக பாதிப்படைகின்றனர். பின்தங்கிய பகுதியிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள், உயிர் உரங்கள் வழங்கி விவசாயம் தழைக்க மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior