உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

திட்டக்குடியில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி,: 

             திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாளை (29ம் தேதி) அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
 
இதுகுறித்து மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் விடுத்துள்ள அறிக்கை: 

                   திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியில் மைனாரிட்டி தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை கண்டித் தும், விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நாளை (29ம் தேதி) காலை 10 மணிக்கு திட்டக்குடி பஸ் நிலையத் தில் கண்டன ஆர்ப்பாடம் நடக்கிறது. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான செம்மலை கண்டன உரையாற்றுகிறார்.மங்களூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி வரவேற்கிறார். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், எம்.எல்.ஏ., செல்விராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், உள் ளாட்சி பிரதிநிதிகள், வெலிங்டன் பாசன விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior