உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

கடலூர் கலெக்டருக்கு பெற்றோர் நன்றி

கடலூர் : 

              நல்லூர் நகர் ஏழை சிறுவனுக்கு கண் நீர்பை அடைப்பு நீக்கும் சிகிச்சைக்கு உதவிய கலெக்டருக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர். விருத்தாசலம் தாலுகா நல்லூர் ஒன்றியம் நகர் பஞ்சாயத்தில் இலவச தொலைக் காட்சி வழங்கும் விழாவில் கூலித் தொழிலாளி மகன் 5ம் வகுப்பு படிக்கும் பாலகிருஷ்ணன் கலெக்டர் சீத்தாராமனிடம் கண்ணில் நீர் வடிவதாக மனு கொடுத்தான். உடனே கலெக்டர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதையொட்டி சிறுவனுக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் முன்னிலையில் கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து அடைப்பை நீக்கினார்.அதனால் மகிழ்ச்சியடைந்த மாணவனின் பெற் றோர் கடந்த 21ம் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப் பாளர் ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior