உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுசத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்: 

               பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 7வது மாநாடு கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பாவாடை வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் ஞானக்கண் செல்லப்பா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய துணைத் தலைவர்கள் சம்சுதீன், கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகனசுந்தரம் 2 ஆண்டு வேலை அறிக்கையினையும், பொருளாளர் கதிர்வேல் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்து பேசினார்.

               மாநாட்டில் ராமசாமி தலைவராகவும், மோகனசுந்தரம் செயலாளராகவும், பாவாடை பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிறப்பித்த அரசாணையில் ஆண், பெண், பாகுபாட்டுடன் உள்ள முரண்பாடுகளை நீக்கி கல்வி தகுதி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்துவது. 10, 20 ஆண்டுகள் பணிமுடித்த அமைப்பாளர்களுக்கு பணி மூப்பு ஊதியம் வழங்குவது போல சமையலர் உதவியளர்களுக்கும், பணி மூப்பு ஊதியம் வழங்கிட அரசை கேட்டுக் கொள்வது. பணிக்காலத்தில் இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க அரசு பிறப்பித்த அரசாணை ஏட்டளவிலேயே உள்ளது. இதை அமல்படுத்தி வாரிசு பணிக் காக காத்திருப்போருக்கு மேலும் தாமதப்படுத்தாமல் பணி வழங்கிட அரசு மற்றும் கலெக்டரை கேட்டுக் கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior