உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

தமிழ் மென்பொருள் தயாரித்த நிறுவனத்துக்கு மாநாட்டில் விருது

                தமிழில் சிறந்த மென்பொருளை தயாரித்ததற்காக, பனேசியா டிரீம் வீவர்ஸ் மென்பொருள் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருதை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

               உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இவ்விருதை முதல்வர் வழங்கினார். விருதுடன் ரூ. 1 லட்சமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் க. அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, ஆ. ராசா, தயாநிதி மாறன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி, மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன், கோவை மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் உள்பட பலர் பங்கேற்றனர். 

www.pdsoftware.in/

1 கருத்துகள்:

  • Unknown says:
    29 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:15

    தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்ததற்காக தமிழக அரசு அவர்களுக்கு சிறந்த கெளரவம் வழங்கி சிறப்பித்துள்ளது. இது பெருமையான விஷயம்.

    மேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
    அறிந்து கொள்ள www.yourastrology.co.in
    என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior