உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

சின்னாபின்னமான சித்தூர் சாலைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பண்ருட்டி: 

               பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் சாலையில் மெகா பள்ளங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

                   கடலூர் - சித்தூர் சாலையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் வீரப்பெருமாநல் லூர் வரையிலான 13 கி.மீ., சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஐல்லிகள் பெயர்ந்து கந்தல் சாலையாக மாறியுள்ளது.பண்ருட்டி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு வந்த ஜல்லிகள், தார் பாரல்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் சாலை அகலப்படுத்தும் பணிகள் செய்யும் காண்ட் ராக்டர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு வருமானத்தை தேடிக் கொண்டனர்.

                         நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட எல்லையில் பண்ருட்டி - முத்துகிருஷ்ணாபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருவதால் பண்ருட்டி- வீரப்பெருமாநல்லூர் வரையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை "பேட்ஜ் ஒர்க்' கூட செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் வரையிலான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior