உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

எம்.எல்.ஏ., சுதர்சனம் மறைவுகடலூரில் இரங்கல் கூட்டம்

கடலூர்: 

              தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங் அலுவலகம் நேருபவனில் நடந்தது.

               கடலூர் முதுநகர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில காங்., செயலாளர் உக்கடம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், சுப்ரமணியன், அழகப்பன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், ஜெகன், மங்கலட்சுமி, உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாடு காங்., சட்டபேரவை தலைவர் சுதர்சனம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மவுனம் அனுஷ்டிக்கப் பட்டது.

விருத்தாசலம்:

                   இளைஞர் காங்., சார்பில் காமராஜர் மாளிகையில் இரங்கல் கூட்டம் நடந்தது. தொகுதி தலைவர் இளையராஜா தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து காங்., கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. நிர்வாகிகள் சேதுபதி, ஜெயராமன், ராஜிவ்காந்தி, நீதிராஜன், முத்துகுமார், தாமரைச்செல்வி மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் சங்க காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior