உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களில் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: டி.ஆர்.ஓ., எச்சரிக்கை

சிதம்பரம்: 

               காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது என காஸ் ஏஜன்சிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் தற்போது வட்ட அளவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிதம்பரம் தாசில்தார் அலுவலககத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டது. வட்ட வழங்கல் தாசில்தார் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், காஸ் நிறுவனத்தினர், நுகர்வோர் குழும செயலாளர் அப்பாவு உள்ளிட்ட பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குறிப்பிட்ட காலத் திற்குள் காஸ் சிலிண்டர் கிடைப்பதில்லை, வீட்டு உபயோக சிலிண் டர் ஓட்டல், டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதல் பணம் கேட்கின்றனர் என பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் பேசுகையில், 

                   "சிதம்பரம் வட்ட அளவில் காஸ் நுகர்வோர்கள் பிரச்னை தொடர்பாக மாதத்தில் கடைசி சனிக்கிழமை குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். காஸ் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் களிடம் கனிவுடன் பேசினாலும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் கூறினாலும் நுகர் வோர் முழு திருப்தி அடைந்து விடுவார்கள். காஸ் எப்போது கிடைக்கும் என் றால், தெளிவாக பதில் கூறுங்கள், கூடுமான வரை காலதாமதம் செய்யக் கூடாது. காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது. நுகர் வோருக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்வது குறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவித்தால் வசதியாக இருக்கும். ஓட்டல்கள், விடுதிகளில் வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி யாரேனும் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் அதே செயலில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior