உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம் : விளை நிலமாகும் அபாயம்

பண்ருட்டி: 

                   ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசு மற்றும் கலெக்டர் என்னதான் கூப்பாடு போட்டாலும் விவசாயிகள் ஏரிகளை ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் அவலம் தொடர்கிறது. பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் 62.17 ஹெக்டர் பரப்பளவில் ஏரி உள்ளது. 

                 இதன் மூலம் 1,000 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனால் இந்த ஏரியில் ஐந்து ஏக்கர் பரப்பளவை தவிர மற்ற இடங்கள் முழுவதும் ஆக் கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி நெல், சவுக்கை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.கடந்த மழையின் போது ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடையும் என்பதால் ஏரிக் கரையை உடைத்து சேதப்படுத்தி நீரை வெளியேற்றினர். 

                 ஆனால் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு அதிகாரிகள் கரைகள் சேதப்படுத்தியது குறித்தே மழைநீர் சேகரிப்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு மழைநீரை ஏரியில் சேகரிக்க முடியாமல் போனது. இதே நிலை பண்ருட்டி தாலுகா முழுவதும் உள்ள நத்தம், சிறுகிராமம், சிறுவத்தூர், எலந்தம்பட்டு, பூங்குணம், எல்.என்.புரம், பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை, கண்டரக்கோட்டை ஏரி, புலவனூர் உள்ளிட்ட 28 ஏரிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விளை நிலங்கள் பயிரிட்டு வருகின்றனர்.
 
                     ஒவ்வொரு விவசாய குறைகேட்பு கூட்டத்தின் போதும் விவசாயிகள் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என ஒருபுறம் கூறினாலும், அதே விவசாயிகள் இருக்கும் ஏரிகளை ஒன்று கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடுவதும் புரியாத புதிராக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior