உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு

கடலூர் : 

                  பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

                   சத்தியசீலன் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சணாமூர்த்தி மகள் பிரியா (12), மற்றும் கீர்த்திகாவும் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் ஐந்து அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்து அதில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கினர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதில் பிரியா இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கீர்த்திகா கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior