உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரிக்கை

கடலூர் : 

           மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கை:

                      நாடு முழுவதும் ஏற்கனவே விலைவாசி விண் ணுயர உயர்ந்ததால் நாட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மீண் டும் பெட்ரோல், டீசல் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணெய் கம்பெனி முதலாளிகளுக்கு சாதகமாக விலையை உயர்த்துவது என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டு மக்களை ஏமாற்றவும் திசை திருப்புவதாகவும் நாடகமாடி விட்டு தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. சமையல் காஸ் விலை 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior