உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

ஐசிசி தலைவராக சரத்பவார் ஜூலை 1-ல் பதவியேற்கிறார்


              சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மத்திய அமைச்சர் சரத்பவார் ஜூலை 1-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் ஜக்மோகன் டால்மியாவுக்குப் பின்னர் அந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது இந்தியராகிறார் சரத்பவார்.தற்போது ஐசிசி தலைவராக உள்ள டேவிட் மோர்கனின் இரண்டாண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ளது.. ஐசிசி வருடாந்திர கூட்டம் நாளை தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைவர் பொறுப்பை டேவிட் மோர்கனிடமிருந்து சரத்பவார் பெறுவார் என ஐசிசி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.ஐசிசி துணைத் தலைவர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டை நியமிப்பது குறித்தும் ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior