உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வயிற்றுப்போக்கு: அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம்:

             சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வயிற்றுப்போக்கினால் அதிகளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலரா நோயாக இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

               சிதம்பரம் நகரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அருகாமையில் உள்ள கோப்பாடி, முள்ளங்குடி, மெய்யாத்தூர், தெம்மூர், நாஞ்சலூர், நந்திமங்கலம், சிவாயம், தவிர்த்தாம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு பல நோயாளிகள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி பெற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, 

                   பருவநிலை மாற்றம், சீதோஷ்ண நிலை மாற்றம், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உள்ளுரில் தயாரிக்கப்படும் தரமற்ற குளிர்பானங்கள் ஆகியவற்றால் இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். எனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கிராமங்களில் குளோரின் கலந்த குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior