உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் செலவில் கான்சாகிப் வாய்க்கால் தூர்வாரும் பணி

கிள்ளை : 

                 சிதம்பரம் அருகே 19 லட்சம் ரூபாய் செலவில் கான்சாகிப் வாய்க்கால் ஆழப்படுத்தி தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சிதம்பரம் கிழக்குப் பகுதியில் நக்கரவந்தன்குடியில் இருந்து பொன்னந்திட்டு வரை 20 வருவாய் ஊராட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் மூலம் இந்த பகுதியில் 9,994 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டதில் இருந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

                  அதனால் மேட்டுப் பகுதியில் உள்ளவர்கள் "தை' பட்டத்திலும், பள்ளக்கையில் இருப்பவர்கள் "நவரை' சாகுபடியையும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.ஆனால் கான்சாகிப் வாய்க்கால் இருபக்க கரையும் தூர்ந்து புதர்மண்டி, ஆகாயத் தாமரை செடி மண்டி கிடந்ததால் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நீர் வழி நடை பயணம் மேற்கொண்ட அப் போதை கலெக்டர் ராஜேந் திர ரத்னுவிடம் சிதம்பரம் கிழக்குப் பகுதி விவசாயிகள் கான்சாகிப் வாய்க்கால் பகுதியை வெட்டி கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளை தூர்வாரும் பணி மூலம் 56 பணிகளுக்கு 2 கோடியே 50 லட் சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

                   இதில் ஒன்றான சிதம்பரம் அடுத்த திருவக்குளம் கலுங்கு மேட் டில் இருந்து நக்கரவந் தன்குடி, பின்னத்தூர், நஞ்சைமகத்துவாழ்க்கை வழியாக காரைக்காட்டு சாவடி வெள்ளாற்று (லாக்கு) வரை 11 கி.மீ., தூரம் 19 லட்சம் ரூபாய் செலவில் கான் சாகிப் வாய்க்காலை ஆழப்படுத்தி இரு பக்கம் உள்ள கரைகளை உயர்த் தும் பணி துவங்கியது. இதனால் விவசாயத்திற்கு தட்டுப்பாடில்லாமல் தண் ணீர் கிடைப்பதுடன், மழைக் காலங்களில் சிதம்பரம் பகுதியில் தேங் கும் தண்ணீர் எளிதில் வடிய வாய்ப்பாக இருக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior