உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

கடலூர் துறைமுகத்தில் 20 டன் சுந்தம் மீன் கொள்முதல்

கடலூர் : 

             நாகப்பட்டினத்திலிருந்து கடலூர் துறைமுகத்திற்கு வந்த விசைப்படகிலிருந்து 20 டன் சுந்தம் மீன் கொள்முதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய சென்னை மீன்பிடி விசைப் படகு நேற்று கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. அங்கு மீன் வியாபாரி ஒருவர் மொத்தமாக விசைப்படகில் உள்ள மீன்களை கொள்முதல் செய்வதற்கு முயன்றார். அப்போது துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சு வார்த்தைக்குப் பின் 20 டன் சுந்தம் மீன்களை ஒருவரே கொள்முதல் செய்து, பதப்படுத்தி ஏற்றுமதி செய்தார். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மற்றொரு படகில் சென்ற கடலூர் அடுத்த சோனங்குப்பம் மீனவர்கள் வலையில் 100 கிலோ எடையுள்ள புள்ளி திருக்கை மீன் பிடிபட்டது. திருக்கை மீனை வியாபாரிகள் கிலோ 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்து பதப்படுத்தி, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior