உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு வாழ்த்து

திட்டக்குடி: 

              கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக் கப்பட்டது

.இது குறித்து கடலூர் மாவட்ட உடல் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

                  கோவையில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டினை நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். துணை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் சிம்மசந்திரன் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக இரவு, பகலாக உழைத்து வரும் கலெக்டர் சீத்தாராமன் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.மேலும், இன்று (28ம் தேதி) காலை 10 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior