உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

கடலூரில் வரும் 3ம் தேதி மூலிகை பயிற்சி துவக்கம்

கடலூர் : 

                மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் வரும் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.மத்திய அரசின் கதர் கிராம தொழில் ஆணையம் நடத்தும் மூலிகை தொழிற் பயிற்சி வரும் ஜூலை 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இப்பயிற்சியில் மூலிகைகள் கொண்டு பல்வேறு மருந்துகள், அழகு சாதன பொருட்கள், ஹெர்பல், ஹேர் ஆயில், ஹெர்பல் ஷாம்பு, வலி தைலம், சூரணங்கள், லேகியங்கள், ஹேர்பல் டை ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது, அதனை சந்தை படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.

                      10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சிக்கு பின் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க 15 முதல் 35 சதவீத மானியத்துடன் கடனுதவி பெறலாம். பயிற்சி குறித்த விவரங்களுக்கு மூலிகை தொழில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவியை 93676-22256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior