உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மின் இணைப்பு

கடலூர்: 

              ஆதிதிராவிட ஏழை விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு;

               மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சொந்த விவசாய நிலம் வைத்துள்ள ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின் இணைப்பு தாட்கோ மூலம் வழங்கப்பட உள் ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப் பதுடன் அவரது பெயரில் பட்டா வைத்திருக்க வேண்டும். மின் இணைப்பு கேட்டு கிணறு அல்லது ஆழ்குழாய் அமைத்து மின் வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகள் உடைய ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப் பத்துடன் போட்டோ, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, ரேஷன் கார்டு, நில உரிமைப் பத் திரம், சிட்டா, அடங்கல், வரை படம் மற்றும் மின்வாரியத்தில் பதிவு செய்துள்ளதற்கான ரசீது ஆகியவற்றின் நகலை இணைத்து வரும் 30ம் தேதிக்குள் கடலூரில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.தகுதியுடைய ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப் பிற்கான வைப்புத் தொகையை தாட்கோ மூலம் செலுத்தப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior