உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

புதிய பென்ஷன் மசோதா திரும்ப பெற வலியுறுத்தல்

கடலூர்: 

               மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் குறிஞ்சிப்பாடி அமைப்புகளின் பேரவைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொன்னுசாமி, சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். 

                      மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் துரைராஜ், காசிநாதன் ஆகியோர் மின் வாரியத்தின் செயல்பாடு, அரசின் நிலையை விளக்கி பேசினர். கூட்டத்தில், புதிய பென்ஷன் மசோதாவை வாபஸ் பெற வேண்டும். மின் வாரியத்தில் தற்போது பெற்று வரும் பென்ஷனை தனியாரிடம் கொடுக்காமல், அரசு துறையில் உள்ள எரிசக்தி துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பென்ஷனர்கள் இறந்தால் 25 ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அடையள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior