உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

கடலூரில் 25ம் தேதி ஆர்ப்பாட்டம் : விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு

ஸ்ரீமுஷ்ணம் :

                           ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சோழத்தரத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

                     கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பட்டுசாமி, வட்ட செயலாளர்கள் ராஜ், இளையபெருமாள் முன் னிலை வகித்தனர். வட்டத் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில்  விவசாய சங்க நிர் வாகிகள் கோகுல் கிறிஸ்டிபன், மாயவன், நாகப்பன், ஞானக்கண்ணன், ஆனைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                      கூட்டத்தில், இயற்கை சீற்றங்களில் இருந்து மக் களை காத்திட நிரந்தர தீர்வு காண வேண்டும், குடிசை வீடுகளை அகற்றி கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டி தந்து குடிசை இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 25ம் தேதி இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.,  உலகநாதன் தலைமையில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior