உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

குழாய்கள் இருந்தும் குடிநீரின்றி ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு :

                ஓடாக்கநல்லூரில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பின்றி போனதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

                  கீரப்பாளையம் ஒன்றிய ஓடாக்கநல் லூர் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப் பட்டுள் ளன. இவைகளில் பெரும்பாலான குழாய் கள் திறக்க முடியாமல் துரு பிடித்துள்ளன. இக்குழாய்களில் 24 மணி நேரமும் தண் ணீர் வடிந்த வண்ணம் உள்ளது.  நூறுநாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேடு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தை ஒன்றிய அதிகாரிகளே நிர்வகித்து வருவதாகவும், இதனால் கூறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.

            பொதுமக்கள் குடிநீர் பிடிக்க பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதாலும், தேவையற்ற புல், பூண்டுகள் புதர்மண்டி கிடப்பதாலும் அப்பகுதி கொசு உற்பத்தி கூடமாக மாறிவிட்டன. குடிநீர் குழாய்கள் இருந்தும், அதனை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதனை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior