உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

திட்டக்குடியில் நாளை அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் :

              திட்டக்குடியில் நாளை (8ம் தேதி) அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடக்கிறது.

            இது குறித்து தொழிலாளர் நல அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) புனிதவதி விடுத்துள்ள செய்தி குறிப்பு:

                   உடலுழைப்பு, கட்டுமானம், ஆட்டோ, தையல், சலவை, பனைமரம், கைவினை, கைத்தறி, காலணி, ஓவியர், மண்பாண்டம், பொற்கொல்லர், வீட்டு பணியாளர், விசைத்தறி உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நாளை (8ம் தேதி) திட்டக்குடி செங்குந்தர் திருமணமண்டபத்தில் நடக்கிறது. முகாமில் பயனடைய விரும்பும் திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று புகைப்படங்கள், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் வரவேண்டும்.  மேலும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் 15 அமைப்புச் சாரா நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் மாதந்தோறும் 2வது வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் நடத்தப்பட உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior