உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சி.ஐ.டி.யூ., மாநாடு பேரணி தொழிலாளர்கள் பங்கேற்பு

கடலூர் :

                   கடலூரில் நடந்த சி.ஐ. டி.யூ., தமிழ் மாநில மாநாட்டு பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.

           சி.ஐ.டி.யூ., 11 வது தமிழ் மாநில மாநாடு கடலூரில் கடந்த 4ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.  பாதிரிக்குப்பத்தில் மாலை 4.40 மணிக்கு  பேரணியை மாநிலத் தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கேரள செண்டை மேள, தாளத்துடன் 11 செங்கொடியேந்தி பெண்கள் அணிவகுத்து சென்றனர். சீருடை அணிந்து சிறுவர், சிறுமியரும், தொண்டரணி மற்றும் பல்வேறு பிரிவு தொழிற் சங்கத்தினர் அணிவகுத்து வந்தனர்.

              கடலூர் அண்ணாப்பாலம் சிக்னல் அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து அகில இந்திய தலைவர் எம்.கே.பாந்தே,  ரங்கராஜன், செயலர்கள் சிங்கராவேலு, குமார் ஆகியோர் பேரணியை பார்வையிட்டு கையசைத்து தொழிலாளர் களை உற்சாகப்படுத்தினர். பேரணி இரவு 7.20 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தை வந்தடைந்தது. பேரணியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior