உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி ஆட்சியர் நியமிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

             சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி பொறுப்புடன் கூடிய ஆட்சியர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                   இதுகுறித்து எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நலச் சங்க துணைத் தலைவர் வீரசோழன், முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஒரு ஆண் டாக ஆட்சியர் பணியிடம் காலியாக உள் ளது. இந்த ஆலைக்கு நியமிக்கப்படும் ஆட்சியர்கள் ஏதேனும் காரணங்களை கூறி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். இதனால் இரண்டாம் கட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

                  இதேபோன்று ஆலைக்கு ஆணி வேராக விளங்கும் கரும்புத் துறையின் தலைமை கரும்பு அலுவலர் பணியிடமும் ஓராண்டாக காலியாக உள்ளது. தற்போதைய தலைமை கரும்பு பொறுப்பு அலுவலர் முந்தைய கரும்பு அலுவலர் என்பதால் அவரை அதிகாரியாக யாரும் ஏற்க மறுத்து வருகின்றனர்.
தனது துறையை பற்றி சிந்திப்பதை விட இதே பதவியை தக்க வைக்கவே அவர் போராடி வருவதால் கரும்புத்துறை முழுவதுமாக சீர் குலைந்து ஆலை நலிவை நோக்கி சென்று விட்டது. ஆலையை நலிவிருந்து மீட்டிடவும், விவசாயிகள் நலனை காத்திட ஆட்சியர் மற்றும் தலைமை கரும்பு அலுவலர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior