உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சி.ஐ.டி.யூ., பேரணியால் கடலூரில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் :

               கடலூரில் சி.ஐ.டி.யூ., தமிழ் மாநில மாநாட்டையொட்டி நேற்று நடந்த 2.30 மணி நேர பேரணியால் புதுச்சேரி, பண்ருட்டி  போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

                 இந்திய தொழிற் சங்க மையத் தின் 11 வது தமிழ்மாநில மாநாடு கடலூரில் கடந்த 4ம் தேதி துவங் கியது. நிறைவு நாளான நேற்று பேரணி நடந்தது. கடலூர் பாதிரிக்குப்பத்தில் மாலை 4.40 மணிக்கு  துவங்கிய பேரணி இரவு 7.20 மணிக்கு மஞ் சக்குப்பம் மைதானத்தை அடைந் தது.  சிதம்பரம், விருத்தாசலம் செல்லவேண்டிய பஸ்கள் இடையூறின்றி சென்றன. பேரணி லாரன்ஸ் ரோடு வழியாக வந்ததால் பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி, பண்ருட்டி மார்க்கம் செல்ல வேண்டிய பஸ்கள்  வழியில்லாமல் நிறுத்தப்பட்டன. அதாவது அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள புறவழிச்சாலை, வண்டிப் பாளையம் சாலையிலும் குறுக் கிட முடியாதபடி பேரணி சென்றதால் பஸ்போக்குவரத்து நிறுத்தப் பட்டன. கடலூர்-புதுச்சேரிக்கு 2 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் செல்ல வேண்டிய பஸ் முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட் டனர். மாலை 7 மணிக்கு மேல்  போக்குவரத்து சீரானது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior